உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பிரதேசத்தில் இன்று(4) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வேட்பாளர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும், அவரது நிலைமை மோசமானதாக இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைக்கு குறித்த வேட்பாளர் நாகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
