பேலியகொடை – ஞானரத்ன மாவத்தை பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.
காரணம்..
மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
