Home ஏனையவை ஜோதிடம் குரு நட்சத்திர பெயர்ச்சி: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 3 ராசியினர்

குரு நட்சத்திர பெயர்ச்சி: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 3 ராசியினர்

0

நவகிரகங்களில் யோக நாயகனாக விளங்க கூடிய குருபகவான் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார்.

குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

ஜோதிடவிதிமுறைகளுக்கமைய, குருவின் நட்சத்திரம் ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை அன்று மாறுகிறது.

அன்றைய தினம் மாலை 5 :22 மணிக்கு குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைவார்.

மிருகசீரிட நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். செவ்வாய் தைரியம் மற்றும் வலிமையின் அடையாளமாக கருதப்படுகிறது. செவ்வாய் விண்மீன் தொகுப்பில் குருவின் மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.

அந்தவகையில், குருபெயர்ச்சியில் சிக்கலை எதிர்கொள்ளக்கூடிய ராசியினர் யார் என பார்க்கலாம்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு,ஆகஸ்ட் 20 க்குப் பிறகு மிருகசீர நட்சத்திரத்தில் குருவின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களை பாதிக்கும்.

வரப்போகும் ஆண்டில், வேலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

பணக்கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்படும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு,

ஓகஸ்ட் 20 ஆம் திகதி செவ்வாய் விண்மீன் தொகுப்பில் வியாழனின் பெயர்ச்சி தொந்தரவாக இருக்கும். இந்த நேரத்தில் உடல்நிலை மோசமடையக்கூடும்.

குடும்பத்தில் கருத்து வேறுபாடு அல்லது வெறுப்பு சூழ்நிலை ஏற்படலாம்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு,

செவ்வாய் விண்மீன் தொகுப்பில் குருவின் பெயர்ச்சி சில சிக்கல்களைக் கொண்டு வரலாம்.

இந்த நேரத்தில் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும்.

வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்கும் போது பெரியவர்களின் ஆலோசனையை நாடினால் நல்லது.

NO COMMENTS

Exit mobile version