Home இலங்கை சமூகம் ஹட்டன் தொடருந்து கடவை தொடர்பில் கவனம் செலுத்தியமைக்கு மக்கள் பாராட்டு

ஹட்டன் தொடருந்து கடவை தொடர்பில் கவனம் செலுத்தியமைக்கு மக்கள் பாராட்டு

0

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் மல்லியைப்பூ
சந்திப்பகுதியில் குறுக்கே அமைந்துள்ள ஆபத்தான தொடருந்து கடவை தொடர்பாக கடந்த
காலங்களில் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து கடவையை சரி செய்வதற்கான
நடவடிக்கைகளை இலங்கை தொடருந்து திணைக்களம் எடுத்துள்ளது. இதற்கு பொது மக்கள்
பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறித்த தொடருந்து கடவையில் அமைந்துள்ள வீதியின் ஒரு பகுதி தாழ்ந்துள்ளதனால்
அடிக்கடி மோட்டார் சைக்கில்களில் பயணஞ் செய்யும் பலர் வீழ்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை 

இது குறித்து பலர் முறைபாடுகள் முன்வைத்த போதிலும்
சரியான தீர்வு பெற்றக்கொடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த காலங்களில் ஊடகங்களில்
செய்திகள் வெளியானதனை தொடர்ந்து இன்று இந்த தொடருந்து கடவை சீர் செய்ய நடவடிக்கை
எடுத்துள்ளதாக குறித்த கடமையில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

எது எவ்வாறான போதிலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் குறித்த இடத்தில்
உயிராபத்து ஏற்படுவதற்கு முன் சரி செய்வது குறித்த பொது மக்கள் தொடருந்து திணைக்களத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றமையும்
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version