புதுடில்லியில் (New Delhi) நிலவும் கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் சுமார் 52 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லியின் வைத்தியசாலை வட்டாரங்கள் குறித்த தகவலை உறுதி செய்துள்ளதாக இந்திய (India) ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், அதிக வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கும் வெப்பநிலை
இந்தியாவின் தலைநகரில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது.
இதன்படி, நாட்டின் வடபகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
இதனால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வெப்பக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், இந்த சூடான காலநிலையால் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்தும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையை நாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/heatwave-kills-52-in-indias-capital-delhi-1718904773
