Home இலங்கை சமூகம் கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை, வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவின்  மேற்கு மத்திய மற்றும் அதனை அண்மித்த வடமேற்கு விரிகுடாவில், நிலைகொண்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் மணித்தியாலங்களில், வடக்கு ஆந்திரா (Andhra) மற்றும் இந்தியாவின் (India) தெற்கு ஒடிசா (South Odisha) கடற்கரையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பலத்த காற்று

மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் பலத்த மழைவீழ்ச்சியும் மிகக் கொந்தளிப்பான கடற்பரப்புகளும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக, கடற்பரப்புகளில் இன்று (செப்டம்பர் 01ஆம் திகதி)கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/heavy-rainfall-winds-advisory-for-provinces-1725197348

NO COMMENTS

Exit mobile version