Home இலங்கை குற்றம் 2 மில்லியன் டொலர் தங்க விவகாரத்தில் ஹிஸ்புல்லாவை சிக்க வைத்து யார்!

2 மில்லியன் டொலர் தங்க விவகாரத்தில் ஹிஸ்புல்லாவை சிக்க வைத்து யார்!

0

கானா நாட்டிலே நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது ஹிஸ்புல்லா தங்க வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற செய்தி நேற்றையதினம்(27) வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறி இருந்தது.

அத்தோடு, தங்க வியாபாரத்தில் ஹிஸ்புல்லாவை ஏமாற்றிய குற்றச்சாட்டில்  11 பேர் கைது செய்யப்பட்டதாக கானா நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு இருந்தன.

இந்தநிலையிலே, தான் கானா நாட்டிற்கு சென்றது உண்மை தான். ஆனால் தான் இந்த விவகாரத்தில் தொடர்புபடவில்லை என  ஹிஸ்புல்லா இன்றையதினம்(28) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த செய்தியானது முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானது எனவும் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version