Home இலங்கை கல்வி உயர் தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

உயர் தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

0

க.பொ.த (உயர் தர) பரீட்சை – 2026 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இதுவரை விண்ணப்பிக்க முடியாமல் போன பரீட்சகர்களிடமிருந்து கிடைத்துள்ள கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு பரீட்சை ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இணையவழியில் (Online) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 2026.06.26 ஆம் திகதி வரை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சகர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அத்துடன், https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியின் ஊடாக 2026.06.26 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும்.

மேலும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமாயின், தொழில்நுட்ப உதவிகளுக்காக 0113661122, 0113671568 ஆகிய தொலைபேசி எண்களின் ஊடாக இணையவழிப் பிரிவையோ அல்லது 0112785231, 0112785681 ஆகிய தொலைபேசி எண்களின் ஊடாக பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டுப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/high-level-answer-sheet-evaluation-examinees-1782135309

NO COMMENTS

Exit mobile version