Home இலங்கை சமூகம் இலங்கையில் ஹீரோவாக மாறிய நடத்துனர் : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய செயல்

இலங்கையில் ஹீரோவாக மாறிய நடத்துனர் : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய செயல்

0

கேகாலையில் பேருந்து தவற விடப்பட்ட தங்க நகையை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புலத்கொஹுபிட்டிய வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தங்க நகையுடன் பொதியை மறந்து விட்டுச் சென்றுள்ளார்.

சுமார் ஆறரை லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் அடங்கிய பை ஒன்று அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – நாளை முதல் புதிய விலை

நடத்துநரின் செயல்

கடந்த 26 ஆம் திகதி காலை கேகாலையில் இருந்து புலத்கொஹுபிட்டிய நோக்கி பயணித்த பேருந்தில், நபர் பையை மறந்து விட்டு சென்றுள்ளார்.

அதன் உரிமையாளர் இல்லாதததால் அதன் நடத்துனர் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிக்கு அறிவித்து கேகாலை போக்குவரத்து சபை பாதுகாப்பு பிரிவிடம் கையை ஒப்படைத்துள்ளார்.

பின்னர், அதிகாரிகள் பையில் இருந்த தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உரிமையாளரைக் கண்டுபிடித்து, அவரை வரவழைத்துள்ளனர்.

இலங்கையில் உயிருக்கு போராடிய தாயையும் மகளையும் காப்பாற்றிய பொலிஸார்

தொழிநுட்ப கோளாறு

அங்கு அவரிடம், தங்க ஆபரணங்கள் அடங்கிய பையை சம்பந்தப்பட்ட நடத்துனர் ஒப்படைத்துள்ளார்.

முன்னதாக ஒரு சந்தர்ப்பத்தில், பேரூந்து ஒன்று திடீரென தொழிநுட்பக் கோளாறு காரணமாக புலத்கொஹுபிட்டிய பேருந்து நிலையத்தில் பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சாரதியின்றி பயணித்தது.

இதன் போதும் குறித்த நடத்துனரே பலரின் உயிரை காப்பாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version