Home இலங்கை குற்றம் கொழும்பில் பயங்கரம் : இரு சகோதரர்கள் வெட்டிக் கொலை

கொழும்பில் பயங்கரம் : இரு சகோதரர்கள் வெட்டிக் கொலை

0

கொழும்பு – கிராண்ட்பாஸின் வெஹெரகொடெல்ல பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (15) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணை

இந்நிலையில், கூர்மையான ஆயுதத் தாக்குதல்களில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் என்று கூறப்படுகிறது.

கொலையைச் செய்த சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version