யாழில் இடைதங்கல் முகாம்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விஜயம் மேற்கொண்டுள்ளது.
குறித்த விஜயம் நேற்று (09) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் அனர்த்தம் கரணமாக மக்கள் தங்குவதற்காக
தற்காலிக இடைத் தங்கல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அலுவலக இணைப்பாளர்
இதனை இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் நேரில் சென்று
பார்வையிட்டுள்ளார்.
மேலும், சாவகச்சேரி பகுதியில் ஆறு இடைத்தாங்கல் முகாம்களை நேரில் சென்று அவர்
பார்வையிட்டதுடன் அங்கு வாழுகின்ற மக்களின் உணவு மற்றும் சுகாதார மேம்பாடுகள்
குறித்தும் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
