யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரியாலை- செம்மணி, சித்துப்பாத்தி மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள்
கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய அகழ்வுப் பணிகள்
ஆரம்பிக்கப்பட்டன.
அகழ்வுப் பணிகள்
ஆரம்பத்தில் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுகொள்ளப்பட்டதையடுத்து இன்று
அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வுப் பணியுடன் 5
எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேநேரம் மேலும் பல எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்
தென்படுகின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
