மாத்தளை, ரத்தொட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசுருகம பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையை செய்ததாக கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை மருத்துவமனையின் ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ளனர்.
மேலதிக விசாரணை
இன்று அதிகாலை 5 மணியளவில் இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கு பின்னர் மறைந்திருந்த சந்தேக நபரான கணவர், ரத்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
