Home இலங்கை சமூகம் மலையக மக்களுக்காக நள்ளிரவிலும் தொடரும் ஐபிசி தமிழின் நிவாரணப்பணிகள்!

மலையக மக்களுக்காக நள்ளிரவிலும் தொடரும் ஐபிசி தமிழின் நிவாரணப்பணிகள்!

0

நாட்டில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு ஐபிசி தமிழ் உறவுபாலம் திட்டத்தின் ஊடாக நிவாரண உதவிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், ஆரம்பக்க கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கில் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மலையகத்தில் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிவாரணங்கள் 

இதனடிப்யைில், இன்று (24) பசறை ஆகரபின்ன பிரதேச மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நள்ளிரவு முதற்கொண்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தொடக்கம் பாதிக்கப்பட்டோருக்கான உலர் உணவு பொதிகள் வரையில் அப்பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நிவாரணங்களை பெற்று கொண்ட மக்கள், சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தனர்.

இது குறித்து தெரிவித்த மக்கள், அரசு தரப்பிலிருந்து பாதிக்கப்ட்ட தங்களுக்கு எந்தவொரு நடவடிக்கைகளும் இதுவரை முறையாக எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, இதனை தாண்டி தங்களுக்கு என ஏதாவது நிவாரணம் வந்தாலும் அவை வீடு மற்றும் காணி உடைய பெருபான்மை மக்களுக்கு மாத்திரமே வழங்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனுடன் மூன்று நாட்களாக தண்ணீருக்கு காத்திருப்பதாகவும் இருப்பினும் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version