கணேமுல்ல பகுதியில் சுமார் ரூ.30 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட சொகுசு ஜீப் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாலனை மத்திய ஊழல் தடுப்பு பணிக்குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த ஜீப் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வாகன திருத்தக உரிமையாளரிடம் இருந்து கண்டுபிடிப்பு
கண்டுபிடிக்கப்பட்ட ஜீப் அப்பகுதியில் நன்கு அறியப்பட்ட வாகன திருத்தக உரிமையாளரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட ஜீப் மேலதிக விசாரணைக்காக கனேமுல்ல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
