சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை, இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் 2ஆவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் அர்ப்பணிப்பு
இது, இலங்கைக்கு 3 வது தவணையாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற வழி வகுத்துள்ளது.
இந்தநிலையில், இது, எதிர்கால நலனுக்காக, இலங்கையின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றி என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/imf-approves-sri-lanka-s-2nd-review-1718220752
