Home இலங்கை சமூகம் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

0

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ற வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அதற்கமைய, இன்று இரவு முதல் பத்தரமுல்ல பகுதிக்கு சிறப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேவையான பணியாளர்கள்

தேவையான பணியாளர்களை சுழற்சியில் முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பயிற்றப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version