Home இலங்கை பொருளாதாரம் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

0

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, 175,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 6ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.

மேலும், 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளன.

திறைசேரி உண்டியல்கள்

அத்துடன் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 85,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதத்தில் மொத்த உத்தியோகபூர்வ ஒதுக்கீடு 5,994 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/important-announcement-of-central-bank-sri-lanka-1730609512

NO COMMENTS

Exit mobile version