இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (narendra modi)இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு(sri lanka) வருகை தந்துள்ளார்.
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை (05) காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதன் பின்னர், ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
MI 17 வகை 4 உலங்கு வானூர்திகள்
இந்த நிலையில், இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு, அவருடைய பயன்பாட்டிற்காக MI 17 வகை 4 உலங்கு வானூர்திகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 40 இந்திய விமானப்படை வீரர்கள் வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
https://www.youtube.com/embed/RNFdzosybd0
