Home உலகம் இஸ்ரேல் மற்றும் ஈரானின் மோதல்: இந்தியா விடுத்துள்ள அதிரடி அழைப்பு

இஸ்ரேல் மற்றும் ஈரானின் மோதல்: இந்தியா விடுத்துள்ள அதிரடி அழைப்பு

0

ஈரானும்  இஸ்ரேலும் உடனடியாக இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆளில்லா விமானங்களையும் மற்றும் ஏவுகணைகளையும் கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்நிலையில், இதனை தொடர்ந்து உருவாகியுள்ள பதற்ற நிலையைத் தணிப்பதற்கு இராஜதந்திர பேச்சுவார்த்தை உடனடித் தேவையென இந்தியா வலியுறுத்தியுள்ளது.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த இந்தியா! காங்கிரஸ் மீது பழி போடும் மோடி அரசு

அச்சுறுத்தல்

குறித்த விடயம் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ஈரானுக்கும் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையிலான பகைமை அதிகரித்திருப்பதால் பிராந்திய அமைதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது குறித்து இந்தியா மிகவும் கவலையடைவதாக தெரிவித்துள்ளது.

அதனால் தற்போதைய பதற்றநிலையைத் தணிக்கவும் மற்றும் மோதல் நிலையைத் தவிர்க்கவும் இராஜதந்திர பாதைக்கு திரும்புமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோமென இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சி : 5.3 வீதம் அதிகரிப்பு

ஈரானுக்கு எதிராக புதிய தடைகள்: அமெரிக்கா எடுத்துள்ள முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version