இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் அதன் பங்காளர்கள் 840 மில்லியன் டொலர்
மதிப்புள்ள கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய விரிவாக்கத்தை திட்டமிட்ட
காலத்தை விட பல மாதங்களுக்கு முன்பே முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனூடாக 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதன் கொள்கலன் திறனை இரட்டிப்பாக்கி
சுமார் 3.2 மில்லியன் அலகுகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முனையத்தின் பங்குகளில் அதானி துறைமுகங்கள் நிறுவனம் 51%, ஜோன் கீல்ஸ்
ஹோல்டிங்ஸ் 34% மற்றும் மீதமுள்ளவற்றை இலங்கை துறைமுக அதிகாரசபையும்
வைத்திருக்கின்றன.
இலஞ்ச குற்றச்சாட்டு
அமெரிக்காவில் இலஞ்ச குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் எதிர்கொண்டதை தொடர்ந்து
இந்த திட்டத்துக்கு அதானி நிறுவனத்துக்கு அமெரிக்க வழங்க முன்வந்த 553
மில்லியனை டொலரை அமெரிக்கா மீளப்பெற்றது.
எவ்வாறாயினும், அதன் பணிகள் தடையின்றி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Source: https://tamilwin.com/article/india-s-adani-group-s-colombo-port-terminal-1758147174
