Home இலங்கை அரசியல் இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

0

இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இன்று சந்தித்துள்ளார்.

எட்டாம் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்றிருந்த நிலையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்துள்ளார்.

பொருளாதார மீட்சி

இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதவேளை, இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version