Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் மறுசீரமைப்புக்கு இந்தியா 450 மில்லியன் டொலர் உதவி

இலங்கையின் மறுசீரமைப்புக்கு இந்தியா 450 மில்லியன் டொலர் உதவி

0

டிட்வா புயலால் இலங்கையில் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்த இந்திய அமைச்சர், இதில் ரூ. 350 மில்லியன் சலுகை கடன் வரிகளும், 100 மில்லியன் அமெரிக்க டொலர் மானியங்களும் அடங்கும் என்று கூறியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் விபரங்களை வெளிப்படுத்திய அவர், இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

மோடியின் கடிதம்

“பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் எங்கள் முதல் பதிலளிப்புப் பங்கை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் மறுசீரமைப்பு தொகுப்பை உறுதி செய்கிறது.

இந்த உறுதிமொழி எவ்வளவு விரைவாக வழங்க முடியும் என்பதை மையமாகக் கொண்டது எங்கள் பேச்சுவார்த்தைகள்,” என்று அவர் கூறியுள்ளார்.

Source: https://ibctamil.com/article/india-to-provide-massive-aid-to-sri-lanka-1766468971

NO COMMENTS

Exit mobile version