Home இலங்கை சமூகம் கற்களை எறிந்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை விரட்டிய இலங்கை கடற்படையினர்

கற்களை எறிந்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை விரட்டிய இலங்கை கடற்படையினர்

0

Courtesy: Sivaa Mayuri

தமிழக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மீது கற்களை எறிந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (07.07.2024) அதிகாலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இராமேஸ்வரத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றவர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தற்போது, தமிழக கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே இன்றைய சம்பவமும் பதிவாகியுள்ளது.

குற்றச்சாட்டு 

இதன் காரணமாக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கடலுக்கு சென்று மீன்கள் இல்லாமல் திரும்பியுள்ளதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கடற்படையினரின் கருத்துக்கள் எவையும் வெளியாகவில்லை.   

Source: https://tamilwin.com/article/indian-and-sri-lanka-fishermen-conflict-1720339413

NO COMMENTS

Exit mobile version