Home இலங்கை சமூகம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு

நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு

0

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7
இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று அதிகாலை இந்திய கடற்தொழிலாளர்கள் எழுவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இந்த நிலையில் அவர்கள் ஊர்காவற்றுறை நீதிவான் வாசஸ்தலத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிவான் நளினி சுபாஸ்கரன் மேற்படி உத்தரவைப்
பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 படகுகளுடன் 181 இந்திய
கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version