Home உலகம் இந்தோனேசியாவில் விபத்துக்கு உள்ளான விமானம்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்

இந்தோனேசியாவில் விபத்துக்கு உள்ளான விமானம்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்

0

இந்தோனேசியாவின் (Indonesia) – பப்புவா பிராந்தியத்தின் யாபின் தீவில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூராவிற்கு செல்ல தயாராக இருந்த திரிகானா ஏர் (Trigana Air) நிறுவனத்தின் ATR-42 விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று(09.09.2024) இடம்பெற்றுள்ளது. 

பப்புவா பிராந்தியத்தின் யாபின் தீவில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூராவிற்கு செல்ல ஓடுபாதையில் தயாராக இருந்த குறித்த ATR-42 விமானம் புறப்படும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகி அருகிலிருந்த மரங்களின் புதர்களுக்குள் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, விபத்துக்குள்ளான விமானத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 42 பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்கள் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

அத்துடன் விபத்தில் காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/indonesia-plane-off-runway-1725919242

NO COMMENTS

Exit mobile version