இரண்டு காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் இணைந்ததன் காரணமாக டித்வா புயல் தீவிரமடைந்துள்ளதாக பேராசிரியர் சரிதா பட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
டித்வா புயல் உருவானமைக்கான பகுப்பாய்வின்படி, இந்த அமைப்பு இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்களின் இணைப்பிலிருந்து தொடங்கியது.ஒன்று தீவின் தென்கிழக்கில் இருந்தும் மற்றொன்று தென்மேற்கிலிருந்தும் உருவாகின்றது.
அதே நேரம் தென்மேற்கில் இருந்து ஒன்று வலுப்பெற்று கிழக்கு நோக்கி நகர்ந்ததும், அதே நேரத்தில் தென்கிழக்கில் இருந்து மற்றொன்று மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்தும் இறுதியில் அவை ஒன்றிணைந்து டித்வா சூறாவளியாக மாறியுள்ளது.
புஜிவாரா விளைவு
இரண்டு சூறாவளிகள் அல்லது குறைந்த அழுத்த அமைப்புகள் ஒன்றையொன்று பாதிக்கும் அளவுக்கு நெருக்கமாகும் போது புஜிவாரா விளைவு என்று அழைக்கப்படுகின்றது.
இது மிகவும் அரிதான நிகழ்வு, இதுபோன்ற சூழ்நிலை இதற்கு முன்னர் பிராந்தியத்தில் பதிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.
இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்களின் இணைப்பால் டித்வா கடுமையானதாக மாறிபெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் விபரித்துள்ளார்.
