Home இலங்கை சமூகம் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைத்துள்ள பல மில்லியன் ரூபா!

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைத்துள்ள பல மில்லியன் ரூபா!

0

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இலங்கை முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.

விசேட அம்சம்

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம், இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக, இந்த நன்கொடையை வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version