Home இலங்கை சமூகம் வெளிநாடொன்றில் மூழ்கிய கப்பலில் இருந்து 21 இலங்கையர்களை மீட்டது ஈரான் கடற்படை

வெளிநாடொன்றில் மூழ்கிய கப்பலில் இருந்து 21 இலங்கையர்களை மீட்டது ஈரான் கடற்படை

0

ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்களை மீட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் கூறியதாக அரச செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கப்பல் குக் தீவுகளின் கொடியின் கீழ் பயணித்த கப்பல் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன

ஈரானின் ஜாஸ்க் கடற்கரையிலிருந்து 30 மைல் (50 கிலோமீட்டர்) தொலைவில் புயல் காரணமாக பெயர் குறிப்பிடப்படாத கப்பல் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்ய போர்! 50 ஆயிரம் இராணுவத்தினர் பலி

மீட்பு எப்போது நடந்தது 

ஐந்து பணியாளர்கள் அவசர சேவையிலிருந்து மருத்துவ உதவியைப் பெற்றனர் ஏனையவர்கள் நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு எப்போது நடந்தது என்று கூறவில்லை. 

ஈரானை தாக்க முயலும் இஸ்ரேல்! பதிலடியை ஊகித்த பிரித்தானியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version