Home இலங்கை சமூகம் இலங்கையின் உள்நாட்டு இறைவரி திணைக்களம் படைத்த வரலாற்று சாதனை

இலங்கையின் உள்நாட்டு இறைவரி திணைக்களம் படைத்த வரலாற்று சாதனை

0

இலங்கையின் உள்நாட்டு இறைவரி (IRD) திணைக்களம் 2 டிரில்லியன் ரூபா வருமானத்தை
தாண்டி வரலாற்று சாதனையை எட்டியுள்ளதாக ஆணையாளர் ருக்தேவி பெர்னாண்டோ
அறிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) இடம்பெற்ற சிறப்பு ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

வரி வருவாய்

அத்துடன் இது, திணைக்களத்தின் வரலாற்றில் மிக உயர்ந்த வசூலைக்
குறிப்பதாகவும்
அவர் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டிற்கான இலக்காக 2,195 பில்லியன் ரூபா வருவாய் இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது வரை 2,080 பில்லியன் ரூபாயை ஈட்டி, திணைக்களம், இலக்கை
நோக்கி சீராக நகர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version