Home உலகம் சிரியாவை பதம் பார்க்கும் இஸ்ரேல் :மூர்க்கத்தனமான தாக்குதலில் இராணுவ நிலைகள் அழிப்பு

சிரியாவை பதம் பார்க்கும் இஸ்ரேல் :மூர்க்கத்தனமான தாக்குதலில் இராணுவ நிலைகள் அழிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் வெளியேற்றத்துக்கு பின், சிரியா(syria) மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்(israel), அந்நாட்டு 80 சதவீத இராணுவ நிலைகளை அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நாட்டில் உள்ள அபாயகரமான ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கையில் போவதை தடுக்கும் வகையில் கடந்த 10 மற்றும் 11ம் திகதிகளில் 400க்கும் மேற்பட்ட தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.இதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

80 சதவீத இராணுவ பொருட்கள் அழிப்பு

இந்த தாக்குதலில், சிரியாவின் ராணுவ தளவாடங்கள், முக்கிய கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, சிரியா நாட்டில் 80 சதவீத ராணுவ பொருட்கள் இந்த தாக்குதலில் அழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள், ராடர்கள், டாங்கிகள்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அல் – பைடா, லதாகியா துறைமுகங்களில் இருந்த 15 கடற்படை கப்பல்கள், தலைநகர் டமாஸ்கசில் இருந்த ஆயுத தயாரிப்பு தளங்கள் உள்ளிட்டவை இந்த தாக்குதலில் சேதமடைந்தன.

போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள், ராடர்கள், டாங்கிகள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

Source: https://ibctamil.com/article/israel-launches-heavy-attack-on-syria-1734112557

NO COMMENTS

Exit mobile version