Home உலகம் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்: மேற்கு கரையில் ஐவர் பலி

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்: மேற்கு கரையில் ஐவர் பலி

0

மேற்கு கரையின் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள நூர் ஷம்ஸ் (Nur Shams) அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தகவலை பலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் கொல்லப்பட்ட 5 பேரின் உடல்கள் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல்- லெபனான் மோதல்

இதேவேளை, கடந்த ஆண்டும் ஒக்டோபரில் இஸ்ரேலிய படைகளின் நடவடிக்கைகளால் மேற்கு கரையில் மொத்தம் 632 பேர் உயிரிழந்ததாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், லெபனானுக்கும் (Lebanon) இஸ்ரேலுக்கும் இடையே அண்மைக்காலமாக விரிவடைந்து வரும் போரைத் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

தாக்குதல்

அத்துடன், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதாகவுள்ளதாக ஈரான் கடந்த சில நாட்களாகவே எச்சரித்து வருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், மேற்கு கரையின் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

Source: https://ibctamil.com/article/israeli-strike-kills-five-palestinians-1724764998

NO COMMENTS

Exit mobile version