Home இலங்கை சமூகம் யாழில் இரண்டரை வயது குழந்தையின் அசாத்திய திறன்..!

யாழில் இரண்டரை வயது குழந்தையின் அசாத்திய திறன்..!

0

ஆயிரம் தமிழ் சொற்களுக்கு ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி யாழ். சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை ஒருவர் அசத்தியுள்ளர்.

குழந்தையின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான
முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.

சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமி காலநிலை,
விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான
பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும்
அசாத்தியமாக கூறுகின்றார்.

ஆங்கிலத்தில் பேசி அசத்தல்… 

தந்தையார் முச்சக்கர வண்டி ஓட்டுனராகவும் தாயார் குடும்ப பெண்ணாகவும் உள்ள பெரிய
அளவிலான பின்புலங்கள் இல்லாத குடும்பத்தில் பிறந்த குறித்த குழந்தையானது இதுவரை
ஏடு தொடக்கப்பாடாத நிலையில் இவ்வாறு அதிசிறந்த ஞாபக சக்தியை கொண்டுள்ளமையானது
பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், யாழ். ஊடக அமையத்தில் இவ்விடையம் குறித்து ஊடக சந்திப்பொன்றை பெற்றோர் முன்னெடுத்திருந்தனர். 

அத்துடன் அந்த குழந்தையின் அசாத்திய திறனை வெளிக்கொண்டு வருவதுடன் அந்த ஆற்றலை உலக
சாதனைப் புத்தகத்தில் பதியப்படுவதற்கான முயற்சியை பெற்றோர் முன்னெடுத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version