Home இலங்கை குற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ் இளைஞன் – ஐரோப்பா செல்ல முயற்சி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ் இளைஞன் – ஐரோப்பா செல்ல முயற்சி

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

போலியான ஆவணங்கள் மூலம் பிரான்ஸ் செல்ல முற்பட்ட இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் செல்ல முயற்சி

வர்த்தக வகுப்பு வசதிகளை பயன்படுத்தி பிரான்ஸிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இளைஞனின் கடவுச்சீட்டில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதன்போது அவை போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version