பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு யாழ்ப்பாண பிரதேச செயலாளரை வடக்கு மாகாண சபைக்கு இடம்மாற்றியுள்ளது.
இதன்படி வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் சாம்பசிவம் சுதர்சன்
இன்றைய தினம் (21.10.2025)யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்
அவர்களிடம் தமக்கான இடமாற்ற விடுவிப்புக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
வடக்கு மாகாண சபையில் கடமை பொறுப்பேற்பு
இவர் நாளைய தினம்
(22.10.2025) வடக்கு மாகாண சபையில் தமது கடமையினை பொறுப்பேற்கவுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
