Home இலங்கை சமூகம் யாழில் மாவீரர்களின் உறவுகளை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு…!

யாழில் மாவீரர்களின் உறவுகளை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு…!

0

யாழில் மண்ணுக்காய் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் உரித்துடையோரைக்
கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்.நீக்கிளஸ் சனசமூக நிலையத்தில் கெளரவிப்பு நிகழ்வு
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈகைச்சுடர் 

இதன்போது மாவீரர்களின் பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின்
திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை சூடி அஞ்சலி செய்யப்பட்டது.

நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version