Home இலங்கை சமூகம் உலகக் கிண்ண சதுரங்க போட்டிக்கு தெரிவான ஈழத்து சிறுமி

உலகக் கிண்ண சதுரங்க போட்டிக்கு தெரிவான ஈழத்து சிறுமி

0
2025 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டிக்கு யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த சிறுமியொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ், இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் (Ghazisana Darshan) என்ற சிறுமியே, நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் எட்டு வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவில் தெரிவாகியுள்ளார்.

இது தொடர்பில் சிறுமியின் தந்தை இன்றையதினம் (13) ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

சதுரங்க போட்டி

மேலும் கருத்து தெரிவித்த அவர, “எனது மகள் 2025 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் எட்டு வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளார்.

எட்டு வயதிலேயே எனது மகளுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

அதுமட்டுமல்ல, எனது மகள் இந்த ஆண்டு ஐந்து சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளார்.

கடந்த மாதம் அல்பேனியாவில் (Albania) நடைபெற்ற மேற்கு ஆசிய இளையோர்களுக்கான போட்டி நடைபெற்றது.

நிதி அனுசரணை

அந்த போட்டியில் பங்குபற்றுவதற்கு நிதி அனுசரணையாளர்கள் கிடைக்காததால் அதில் பங்குபற்ற முடியவில்லை.

இவர் கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடத்தை பெற்று, இலங்கையின் எட்டு வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உத்தியோகபூர்வ வீரராக தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் (Thailand) நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு சர்வதேச வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

அத்தோடு, கடந்த டிசம்பர் மாதம் உலகளவிலான ரப்பிட் செஸ் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டார்.

எனவே, இவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் எமது நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு நிதி வசதி தேவையாகவுள்ளது.

எனவே நிதி அனுசரணையாளர்கள் ஆதரவு வழங்கும் பட்சத்தில் எமது பிள்ளை மேலும் பல போட்டிகளில் பங்குபற்றி எமது மண்ணுக்கு பெருமை சேர்க்க வழிவகுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version