யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த
சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலமாக மீட்பு
அவரது வீட்டுக்கு அருகேயுள்ள உறவினர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளார்.
சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
