யாழில் இயங்கும் அரச – தனியார் பேருந்து சேவைகள் தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஆராய்வு செய்துள்ளனர்.
இந்நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இளங்குமரன் உள்ளிட்டோர் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த இளங்குமரன் எம்பி, மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கக் கூடிய தீர்மானங்களை இந்த போக்குவரத்து விடயத்தில் எடுப்போம் என குறிப்பிட்டார்.
