Home இலங்கை குற்றம் கனடாவில் இருந்து வந்த நபரின் 85 இலட்சம் பணத்தை கொள்ளையடித்த தரகர்

கனடாவில் இருந்து வந்த நபரின் 85 இலட்சம் பணத்தை கொள்ளையடித்த தரகர்

0

காணி வாங்குவதற்காக கனடாவில் (Canada) இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) வந்த புலம்பெயர் நபர்
ஒருவரின் 85 இலட்சம் ரூபாய் பணத்தினை தரகர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று
யாழில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், கனடாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் தெல்லிப்பழையில் தங்கி
இருந்துள்ளார்.

அதேவேளை, காணி ஒன்றினை கொள்ளளவு செய்வதற்காக தரகர்
ஒருவருடன் தொடர்பினை பேணியுள்ளார்.

பொலிஸில் முறைப்பாடு 

இந்நிலையில், கிளிநொச்சியை சேர்ந்த அந்த தரகர், கனடாவில் இருந்து வந்தவரின் 85 இலட்சம்
ரூபாவினை திருடிச் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த புலம்பெயர் நபர் நான்கு நாட்களின்
பின்னர் தனது பணத்தினை தேடியுள்ளதுடன் பணம் காணாத நிலையில் அதிர்ச்சி
அடைந்துள்ளார்.

இதற்கமைய, இச்சம்பவம் குறித்து தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் அந்நபர் முறைப்பாடு ஒன்றினை பதிவு
செய்துள்ளார்.

மேலும், இது குறித்து தெல்லிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version