Home இலங்கை சமூகம் யாழில் வாள்களுடன் இளைஞர் கைது : காவல்துறையினர் விசாரணை

யாழில் வாள்களுடன் இளைஞர் கைது : காவல்துறையினர் விசாரணை

0

யாழ்ப்பாணத்தில்( Jaffna)  வாகன பதிவின்றி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் ஐந்து வாள்களையும் யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பானது நேற்றையதினம்(21) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் வாகனத்தினை வழிமறித்து சோதனையிட்ட நிலையில் வாகனப்பதிவின்றி வாகனம் பயணித்தமை தெரியவந்தது.

மேலதிக விசாரணை

இதனையடுத்து குறித்த இளைஞரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சந்தேக நபரது வீட்டிலிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/8zcLlpd14gs

Source: https://ibctamil.com/article/jaffna-police-seized-vehicle-swords-in-jaffna-1719012892

NO COMMENTS

Exit mobile version