யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு சிறப்பாக இயங்குகின்றது என வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வைத்தியசாலையின் கட்டிட வசதிகளும், உபகரண
மற்றும் ஆளணி வசதிகளும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய உபகரணங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதிகளுக்காக இரண்டு
கட்டில்களும் சில உபகரணங்களும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை
தந்திருந்த அன்பரினால் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
போதனா வைத்தியசாலையில் சில விடுதிகள் அண்மையில் திறக்கப்பட்டது.
மற்றும்
இவ்வாறு புதிய உபகரணங்கள் வழங்கப்படுவதும் வைத்திய சேவையை மேலும்
வலுப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
