Home இலங்கை சமூகம் யாழ். காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவையில் சிக்கல்: வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ். காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவையில் சிக்கல்: வெளியான முக்கிய அறிவிப்பு

0

யாழ்ப்பாணம் (jaffna) – காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் (
Niranjan) தெரிவித்துள்ளார்.

போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் வருகை

கப்பல் போக்குவரத்து குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில்,

எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் குறித்த கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மாத்திரமே நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version