Home இலங்கை கல்வி “கனலி” மாணவர் சஞ்சிகை இதழ் வெளியிடும் நிகழ்வு: யாழ் பல்கலைக்கழகம்

“கனலி” மாணவர் சஞ்சிகை இதழ் வெளியிடும் நிகழ்வு: யாழ் பல்கலைக்கழகம்

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் “கனலி” மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியிடும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் தலைமையில் இன்றையதினம் (04.10.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

கலைப்பீட பீடாதிபதி 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும் (Sivakolundu Sirisakunaraja) சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும் (C. Raghuramu)  கலந்து கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இச்சஞ்சிகை வெளியீட்டில் மாணவர்களுக்கான வாழ்த்துரையினை ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலனும், சஞ்சிகைக்கான கருத்துரைகளை தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார், சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் ஆகியோரும் வழங்கியிருந்தனர்.

ஊடகக் கற்கைகள் துறையின் மூன்றாம் வருட மாணவர்களால் உருவாக்கப்பட்ட கனலி சஞ்சிகையானது முழுக்க முழுக்க மாணவர்களின் ஆக்கங்களை தாங்கியே வெளிவருகிறது.

இந்நிகழ்வில் ஊடகக்கற்கைகள் துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version