Home இலங்கை சமூகம் யாழ்.பல்கலையில் பழைய மாணவர்கள் நடைபவனி: குவிக்கப்பட்ட காவல்துறையினர்!

யாழ்.பல்கலையில் பழைய மாணவர்கள் நடைபவனி: குவிக்கப்பட்ட காவல்துறையினர்!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கம் பெருமையுடன்முன்னெடுக்கும் “வேரிலிருந்து விழுது வரை” ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி இன்றையதினம் (21) நடைபெற்றது.

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணி மற்றும் நடைபவனி மேற்கொள்வதற்கு தடை விதித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, தேர்தல் சார்ந்த நடைபவனி அல்ல என காவல்துறையனருக்கு ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்திய நிலையில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் நடைபவனியில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனையுடன் நடைபவனி இடம்பெற்றது.

நடைபவனி ஆரம்பம்

பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கம் முன்பாக ஆரம்பித்த நடைபவனி பிரதான நுழைவாயில் ஊடாக சென்று பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலுடாக மீண்டும் கலைப்பீடத்தை வந்தடைந்தது.

நடைபவனியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பல்கலைக்கழக பழைய மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

https://www.youtube.com/embed/pCE3gEm-0j4

NO COMMENTS

Exit mobile version