Home இலங்கை சமூகம் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

0

யாழ்ப்பாண ( Jaffna) பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இன்று (14) 10.45 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

 கோரிக்கை

குறித்த போராட்டமானது சம்பள முரண்பாடு, MCA கொடுப்பனவு அதிகரித்து வழங்குதல் போன்ற பல நீண்டகால
பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக
ஊழியர்சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து போராட்டமானது யாழ்.பல்கலைக்கழக
வளாகத்திலிருந்து பேரணியாக வந்து பிரதான வாயிலில் கவனயீர்ப்பு போராட்டமாக
இடம்பெற்றுள்ளது.

Source: https://ibctamil.com/article/jaffna-university-staff-union-protest-1718351631

NO COMMENTS

Exit mobile version