Home இலங்கை சமூகம் யாழில் மூளையில் இரத்தக்கசிவால் பலியான குடும்பப் பெண்

யாழில் மூளையில் இரத்தக்கசிவால் பலியான குடும்பப் பெண்

0

யாழில் மூளையில் இரத்தக்கசிவு காரணமாக குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலி பகுதியை சேர்ந்த கணேஸ்வரன் திகழ்மதி (வயது 45)
என்பவரே உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி வைத்தியசாலை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த பெண்ணுக்கு கடந்த 14 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் அச்சுவேலி
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றையதினமே
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு மூளையில் இரத்த
கட்டி உள்ள விடயம் தெரியவந்துள்ளது.

சத்திர சிகிச்சை 

இதையடுத்து, 15 ஆம் திகதி சத்திர சிகிச்சை
மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (16) அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.
ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம்
சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version