யாழ்ப்பாணத்தில்(Jaffna) வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம்(13) இரவு இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் இளைஞனே வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து
வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் இருவரை ஒரு சில மணி நேரத்தில்
கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
