மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு நாளையதினம்(13) இடம்பெற உள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பான
மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம் பெற
வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பாலும் விடுக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை ஜனாதிபதி
செயலகத்தில் ஏற்பாடு செய்துள்ளார் என ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
