அம்பாறை – காரைதீவு பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
சிசிரிவி காணொளி
குறித்த சம்பவம் இன்று (06.08.2025) மாலை 7.13 அளவில் நடந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் பதிவான சிசிரிவி காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
